தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு

*தொற்று நோய் பரவும் அபாயம்

Advertisement

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுற்றுச் சுவர் அருகே வாறுகாலில் தேங்கி கிடக்கும் கழிவு நீரால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இங்கு நாள்தோறும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக சுமார் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள் நோயாளிகளைப் பார்க்க ஏராளமான உறவினர்களும் மருத்துவமனைக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் பிரதான நுழைவு வாயில் அருகே பெரிய வாறுகால் உள்ளது. அதில் கழிவு நீரானது தேங்கி கிடக்கிறது. சமீபத்தில் பெய்த மழை நீரும் இதனுடன் கலந்து செல்கிறது. திறந்த நிலையில் அந்த வாறுகால் உள்ளதால் அதிலிருந்து துர்நாற்றம் அடித்து வருகிறது.

இதனால், மருத்துவமனைக்கு வந்து செல்வோர் முகத்தை மூடிக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே, தேங்கி கிடக்கும் கழிவு நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தினசரி நூற்றுக் கணக்கானோர் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அப்போது வெளியே உள்ள வாறுகாலின் நாற்றம் தாங்க முடியாமல் பலர் அவதிப்படுகின்றனர். பலர் குழந்தைகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வருகின்றனர்.

இதனால், குழந்தைகளுக்கு வேறு பல நோய்கள் தாக்கும் நிலை உள்ளது. மேலும், தேங்கிக் கிடக்கும் கழிவுநீரில் உருவாகியுள்ள கொசுக்களினால் இரவு நேரங்களில் மருத்துவமனை வளாகத்தில் கொசுத் தொல்லையும் அதிக அளவில் உள்ளது.

இதனால், மருத்துவர்கள், செவிலியர்கள் நோயளிகள் என அனைவரும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, தேங்கி கிடக்கும் கழிவு நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Advertisement