Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சீயக்காய் பதப்படுத்தும் பணிகளில் பழங்குடியின மக்கள் தீவிரம்

வால்பாறை: வால்பாறை வனப்பகுதியில் தற்போது சீயக்காய் சேகரிப்பு பணிகளில் பழங்குடி மக்கள் இறங்கி உள்ளனர். வால்பாறையை சுற்றியுள்ள உடும்பன் பாறை, கல்லார்குடி, நெடுங்குன்றம், கவர்கல், கூமாட்டி, சங்கரன் கடவு, பாலகனாறு உள்ளிட்ட பழங்குடி கிராம மக்கள் தேன், குங்கிலியம், காட்டு நெல்லி, கடுக்காய், லெமன் கிராஸ் ஆயில், சீயக்காய் போன்ற சிறு பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது சீயக்காய் சீசன் என்பதால் அவற்றை காய வைத்து பதப்படுத்தும் பணியில் உள்ளனர். சீகக்காய் என்பது கூந்தல் பழம் என்று பொருள்படும், இது நீண்ட காலமாக இயற்கை ஷாம்பூவாகப் பயன்படுத்தப்படுகிறது. பழக்காய்களை உலர்த்தி பொடியாக அரைக்கலாம். இந்த பொடியை தண்ணீரில் கலந்து நேரடியாக முடியில் தடவலாம்.

இருப்பினும், இது ஒரு வழக்கமான ஷாம்பூவைப் போல போதுமான நுரையை உற்பத்தி செய்யாது. இருப்பினும், மற்றொரு காட்டுப்பொருளான பூச்சக்காய் அல்லது சோப்புக்கொட்டை, நுரை நீக்கும் பண்பை அளிக்கிறது. பழங்குடி மக்கள் காடுகளிலிருந்து சீகைக்காய் சேகரிக்கின்றனர். பின்னர், காய வைக்கின்றனர். சீயக்காய் பொடி செய்து பூச்சக்காய் அல்லது சோப்பு கொட்டையுடன் கலந்து பயன்படுத்துகின்றனர். அல்லது சீயக்காய் பொடி செய்து விற்று விடுகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பழங்குடி மக்கள் கிராமங்களை ஆய்வு செய்த கோவை கலெக்டர் பவன்குமார் வன விளைவு பொருட்களை சந்தைப்படுத்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டு, உரிய கருவிகளை கொடுத்து மதிப்பீட்டு பொருளாக மாற்றி விற்பனை செய்ய ஊக்குவிக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.