தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

30% தங்க கடன் திருப்பி செலுத்தப்படவில்லை; பெண்கள் தங்க தாலியை இழக்க பாஜ அரசே காரணம்: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு

Advertisement

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “ இந்தியாவில் பெண்களிடமிருந்து தங்க தாலிகளை திருடிய ஒரே அரசாங்கம் என்ற பெயரை மோடி அரசு பெற்றுள்ளது.

உயிரியல் பிறப்பல்லாத பிரதமர் மோடியின் பதவிக்காலத்தில் தங்க கடன்கள் வேகமாக அதிகரித்து வருவது பற்றிய பிரச்னையை நாங்கள் எழுப்பினோம். இந்திய குடும்பங்களால் ரூ.3 லட்சம் கோடி தங்க கடன்கள் வாங்கப்பட்டு, அவை இன்னும் நிலுவையில் உள்ளன. அதிகரிக்கும் தங்க கடன் மற்றும் மந்தமான பொருளாதாரம் ஆகியவற்றால் குடும்பங்கள் இந்த தங்க கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

2024 ஜூன் முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் தங்க கடன்களின் என்பிஏ விகிதம் 30 சதவீதம் ரூ.5,149 கோடியில் இருந்து ரூ.6,696 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் இவை முறையான தங்க கடன்கள் மட்டும்தானா? எத்தனை குடும்பங்கள் இந்த தங்க கடன்களை வாங்கி உள்ளன என்ற மதிப்பீடு இல்லை. குடும்பங்கள் இந்த தங்க கடனை திருப்பி செலுத்த தவறும்போது பெரும்பாலும் அடிப்படை தங்க சொத்தை இழக்கிறார்கள். நாட்டில் தங்க கடன்களை திருப்பி செலுத்தாதன் காரணமாக பெண்களின் தங்க தாலிகளை திருடுவதற்கு அரசே பொறுப்பு” என குற்றம்சாட்டி உள்ளார்.

Advertisement