Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்; 3 நாளில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்தது: வெள்ளியும் போட்டி போட்டு உயருகிறது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 3 நாளில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது. இதே போல வெள்ளியும் போட்டி போட்டு உயர்ந்து வருகிறது. தங்கம் விலை இம்மாதம் தொடக்கத்தில் இருந்து குறைந்து வந்தது. அதாவது 1ம் தேதி முதல் சுமார் 10 நாளில் பவுனுக்கு ரூ.8 ஆயிரம் வரை குறைந்தது. இன்னும் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 12ம் தேதி முதல் தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. 12ம் தேதி அன்று தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 10,400க்கும் விற்பனையானது. தொடர்ந்து 13ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,860க்கும், பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 10,880க்கும் விற்றது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். இதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. வாரத்தின் ெதாடக்க நாளான நேற்று தங்கம் விலை மேலும் அதிகரிக்க தான் செய்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,070க்கும், பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12560க்கும் விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை தொடர்ந்து 3 நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.4,560 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கத்தை போல வெள்ளி விலையும் நேற்று அதிரடியாக உயர்ந்தது. வெள்ளியை பொறுத்தவரையில் நேற்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.280க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் அதிகரித்து, பார் வெள்ளி ரூ.2.80 லட்சத்துக்கும் விற்பனையானது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது.