தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுமிக்கு பாலியல் தொல்லை; தந்தை, சகோதரன் கைது

Advertisement

திருவொற்றியூர்: திருவொற்றியூர் காலடிப்பேட்டை பூங்காவனபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (35), தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ஜான்சிமேரி. இருவரும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 6 வருடங்களுக்கு முன்பு கணவன்- மனைவி இருவரும் பிரிந்து விட்டனர். அப்போது 3 குழந்தைகளையும் ஸ்டீபன்ராஜின் மனைவி ஜான்சிமேரி தன்னுடன் அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு உறவினர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி தனது 2வது மகளை மனைவியிடம் இருந்து பிரித்து தன்னுடன் அழைத்து வந்து விட்டார் ஸ்டீபன் ராஜ். பின்னர் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் படிக்க வைக்க, தற்போது 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாய் சகோதர, சகோதரியை பார்க்க வேண்டும் என்று தந்தை ஸ்டீபன்ராஜிடம் மகள் தெரிவிக்க அவரை உறவினருடன் தண்டையார்பேட்டையில் உள்ள பிரிந்து சென்ற தனது மனைவியின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் ஜான்சி மேரி திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தனது மகளை கணவன் ஸ்டீபன் ராஜ், அவரது அண்ணன் மகன் திலீப்குமார் (19) ஆகிய இருவரும் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இருந்தார். மேலும் மகளை ராயபுரத்தில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்தார். இந்த புகாரின்பேரில் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஸ்டீபன் ராஜ் மற்றும் அவரது அண்ணன் மகன் திலீப்குமார் இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

 

Advertisement

Related News