தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: எஸ்ஐ கைது; உடனடியாக சஸ்பெண்ட்

Advertisement

திருப்பரங்குன்றம்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறப்பு எஸ்ஐ கைதானார். உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்து மதுரை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ ஆக பணியாற்றியவர் ஜெயபாண்டி. இவர், கடந்த டிச.13ம் தேதி கார்த்திகை திருவிழா பாதுகாப்பு பணிக்காக திருப்பரங்குன்றத்திற்கு சென்றார். அப்போது திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, கோயிலுக்கு வந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசார், திடீர் நகர் சிறப்பு எஸ்ஐ ஜெயபாண்டி மீது, போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் சிறப்பு எஸ்ஐ மீதான குற்றச்சாட்டு உண்மை என தெரிய வந்ததால் நேற்று அவரை போக்சோவில் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

கைதான ஜெயபாண்டி, மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது திருநங்கை ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, புகாருக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் பாலியல் வழக்கில் சிறப்பு எஸ்ஐ ஜெயபாண்டி கைதானதால், அவரை சஸ்பெண்ட் செய்து மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Related News