சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: எஸ்ஐ கைது; உடனடியாக சஸ்பெண்ட்
Advertisement
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசார், திடீர் நகர் சிறப்பு எஸ்ஐ ஜெயபாண்டி மீது, போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் சிறப்பு எஸ்ஐ மீதான குற்றச்சாட்டு உண்மை என தெரிய வந்ததால் நேற்று அவரை போக்சோவில் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
கைதான ஜெயபாண்டி, மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது திருநங்கை ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, புகாருக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் பாலியல் வழக்கில் சிறப்பு எஸ்ஐ ஜெயபாண்டி கைதானதால், அவரை சஸ்பெண்ட் செய்து மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
Advertisement