தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது திமுக எம்.பி. கிரிராஜன் திட்டவட்டம்

Advertisement

டெல்லி : ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு என்பது கூட்டாட்சி தத்துவதற்கு எதிரானது என்று திமுக எம்.பி. கிரிராஜன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசிய அவர், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறு சீரமைப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று சாடினார். நாட்டு நலனுக்காக மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலத்திடம் இருந்து தொகுதிகளின் எண்ணிக்கையை பறித்து, மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத பிற மாநிலங்களிடம் அளிப்பது நியாயமில்லை என்று அவர் எடுத்துரைத்தார்.

மேலும் பேசிய அவர், "மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் தொகுதி மறுசீரமைப்பால் பல தொகுதிகளை இழக்கும். அதேநேரத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத உத்தரப்பிரதேசம், பீகார்,ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு பல தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு, கூட்டாட்சி தத்துவதற்கு எதிரானது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு தரும் தண்டனையா இது?. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது,"இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement