தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுற்றுலா பயணிகளை கவரும் ஜெரோனியம் மலர் அலங்காரம்

Advertisement

ஊட்டி: ஊட்டி கர்நாடக பூங்காவில் வைக்கப்பட்டுள்ள ஜெரோனியம் மலர் அலங்காரங்கள் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை விடுமுறையில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், கோடை சீசன் துவங்க சில நாட்களே உள்ள நிலையில் தற்போது அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணியில் தோட்டக்கலைத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபால், கர்நாடக மாநில தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவும் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இப்பூங்காவில், தொட்டிகளில் ஜெரோனியம், பால்சம், டெய்சி உட்பட பல்வேறு வகையான மலர் செடிகள் வைக்கப்பட்டு, தற்போது, அதில் மலர்கள் பூத்து காணப்படுகிறது. இந்த தொட்டிகள் பசுமை குடிலில் மாடங்களில் மற்றும் தரையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரங்களை கண்டு ரசித்து செல்வதுடன், அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

Advertisement