பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் டிஜிட்டல் முறையில் அபராதம்! : சென்னை மாநகராட்சி புதிய முயற்சி
Advertisement
இந்த நிலையில் விதிகளை மீறி குப்பைகளை கொட்டுபவர்கள், அதனை எரிப்பவர்கள் மீது ஸ்பாட் பைன் (spot fine) வசூலிக்கும் சோதனை முறையை சென்னை மாநகராட்சி நேற்று தொடங்கியது. அதன்படி, போக்குவரத்து காவலர்கள் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க பயன்படுத்தும் டிஜிட்டல் கருவி போன்ற புதிய டிஜிட்டல் கருவியை சென்னை மாநகராட்சி சோதனை முறையில் பயன்படுத்தி வருகிறது. முதல்கட்டமாக 500 கருவிகளை கொள்முதல் செய்துள்ளது. இந்த கருவிகள் 15 மண்டலங்களில் வழங்கும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளது.டிஜிட்டல் முறையில் அபராதம் விதிக்கும் நடைமுறை விரைவில் அனைத்து பகுதிகளிலும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement