தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காந்தியே ஆட்சி செய்தாலும் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும்: அதிமுக மாஜி அமைச்சர் ஓபன் டாக்

திண்டிவனம்: ‘காந்தியே ஆட்சி செய்தாலும் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும்’ என்று அதிமுக மாஜி அமைச்சர் சிவி சண்முகம் பேசி உள்ளார். மகளிருக்கு எதிரான குற்றங்களை தடுக்கக்கோரி விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் திண்டிவனம் காந்தி சிலை அருகே நேற்று மாஜி அமைச்சரும், எம்பியுமான சி.வி.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டுமென கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

Advertisement

குறிப்பாக, அதிகளவில் கூட்டத்தை கூட்ட ஒன்றிய செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக தெரிகிறது.  ஆனால், சமீபத்தில் அதிமுக கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், அரசு செயல்படுத்தி வரும் இலவச திட்டங்களை ஒப்பிட்டு, ‘தேர்தல் நேரத்தில் ஆளுக்கொரு பொண்டாட்டி இலவசம் என்று கூட அறிவிப்பார்கள்’ என பேசியிருந்தார். இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள், அமைப்புகள் கண்டன தெரிவித்தன. மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதுதொடர்பாக மகளிர் ஆணையமும் சி.வி.சண்முகத்துக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இதனால், மகளிருக்கான அதிமுக அழைப்பு விடுத்த போராட்டத்துக்கு அதிமுக மகளிர் அணியே வராததால் பிசுபிசுத்தது. சொந்தக் கட்சியைச் சேர்ந்த 120 மகளிர் மட்டுமே பங்கேற்றனர். ஒன்றிய செயலாளர்கள் அழைத்தும் பல கிராமங்களைச் சேர்ந்த மகளிர் வரமறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

நீண்டநேரமாக காத்திருந்தும் எதிர்பார்த்த கூட்டம் வராத நிலையில் ஒருவழியாக பேச்சை தொடங்கினார் சி.வி.சண்முகம் எம்பி. ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம் பேசும்போது, ‘காந்தியே ஆட்சி செய்தாலும் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும். ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும்’ என்று கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இவரது இந்த பேச்சை கேட்டு அதிமுக மகளிர் அணியினரே அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement

Related News