தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிதி வழங்க மறுத்தால் போராட்டங்கள் வெடிக்கும்: ஒன்றிய அரசுக்கு ஆசிரியர் கூட்டணி எச்சரிக்கை

Advertisement

சென்னை: தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் இரா.தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ஒன்றிய அரசின் கல்வி நிதி ரூ.2152 கோடி நிதியை தர மறுப்பதோடு, ஒன்றிய அரசு கொண்டு வரும் புதியக் கல்வி கொள்கையில் தமிழ்நாடு அரசு கையொப்பம் இட்டால்தான் அளிக்கப்படும் என்ற ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துக்கு கடுமையான கட்டணத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிஎம்ஸ்ரீ திட்டத்தின் முதல் முன்மொழிவு, மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்கப்படும் என்கின்ற பேச்சு வன்மையான கண்டனத்துக்குரியது. குறிப்பாக புதிய கல்விக் கொள்கையில் 3,5,8 வகுப்புகளுக்கு கட்டாயத் தேர்வு நடத்தும் நடைமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடைகளை உருவாக்குகிற நிலைதான் இந்த 3,5,8, வகுப்புக்கான தேர்வு முறை.

குறிப்பாக உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பயின்று வருகிறார்கள். இதற்கு தடை ஏற்படுத்தும் வகையில். இந்த புதிய கல்வி கொள்கை அமைந்துள்ளது. புதிய கல்விக் கொள்கை இடைநிற்றலை அதிகரித்து குலக் கல்வியை மீண்டும் கொண்டுவரும் திட்டமாகும். பள்ளி கல்வி அமைச்சர் நேரில் சென்று டெல்லியில் பலமுறை முறையிட்டும் நிதி வழங்காமல் இருப்பது ஆசிரியர்கள் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்வி ஒத்திசைவு பட்டியலில்தான் உள்ளது. ஒத்திசைவு என்பது ஒருவழி பாதை அல்ல. இரு அரசுகளும் ஏற்றுக் கொண்டால் தான் புதிய நடைமுறையை செயல்படுத்த முடியும். அண்ணா காலத்தில் அறிவிக்கப்பட்ட இருமொழி கொள்கையே தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே ஒன்றிய அரசு, உடனடியாக கல்விக்கு ஒதுக்கிய நிதி ரூ.2152 கோடியை தமிழகத்திற்கு உடனே வழங்க வேண்டும். இல்லையெனில் ஆசிரியர்கள்-மாணவர்கள்-பெற்றோர்கள் ஒன்று திரண்டு போராட்ட இயக்கங்களை அறிவிப்போம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Advertisement