தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்லடம் பேருந்து நிலையம் முன்பு மது போதையில் பேருந்து கண்ணாடியை உடைத்து ரகளை; 4 வாலிபர்கள் கைது

Advertisement

பல்லடம் : பல்லடம் பேருந்து நிலையம் எதிர்புறம் நேற்று தூத்துக்குடி மாவட்டம் தெற்கு சிலுக்கன்பட்டி ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் குணசேகர் (18), புதுக்கோட்டையை சேர்ந்த பாலமுருகன் (24), தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த மதன் (23), புதுக்கோட்டை பிரகாஷ் நகரை சேர்ந்த சுடலைமுத்து (20), துத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த மாரிதங்கம் (24) ஆகிய நான்கு வாலிபர்கள் மது போதையில் அங்கு வந்த பப்புராஜ் என்ற வடமாநில இளைஞர் மற்றும் அவரது நண்பர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில், வாக்குவாதம் கை கலப்பாக மாறி தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர்கள் நான்கு பேரும் அந்த வடமாநில இளைஞர்களை துரத்தி துரத்தி சரமாரியாக தாக்கினர். பின்னர் மது போதையில் தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்ற வாலிபர் பல்லடம் நோக்கி வந்த அரசு பேருந்து கண்ணாடிகளை இரும்பு கம்பியால் தாக்கி உடைத்தார். மேலும், அப்பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியின் முகப்பு கண்ணாடியையும் உடைத்தனர். அதன் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.

இதில் படுகாயம் அடைந்த வட மாநில இளைஞர்கள் 2 பேர் பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு வாலிபர்களை பல்லடம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement