இன்று முதல் டி20 ஆஸி-பாக் பலப்பரீட்சை
Advertisement
பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடக்கும் முதல் ஆட்டத்திலேயே வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் ஜோஷ் இங்லீஸ் தலைமையிலான ஆஸி அணி செயல்படும். அதேசமயம், ஏற்கனவே ஒரு நாள் தொடரை வென்றுள்ள முகமது ரிஸ்வான் தலைமயிலான பாக். அணி, டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு தொடரை கைப்பற்ற முற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரை பொறுத்தவரை, சொந்த மண்ணில் விளையாடுவது ஆஸிக்கு கூடுதல் பலம். எனினும் வரும் 2026ம் ஆண்டு உலக கோப்பைக்கு வலுவான அணியை உருவாக்க இரு அணிகளும் தீவிரமாக உள்ளதால் இந்த தொடர் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement