Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காருக்குள் விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை

அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரிதன்யா (27). இவருக்கும் கைகாட்டிப்புதூர் ஜெயம் கார்டன் பகுதியை சேர்ந்த சுவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணமானது. தம்பதிக்கிடையே அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து காரை ஓட்டிச்சென்ற ரிதன்யா, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னை கணவர் வீட்டினர் கொடுமைப்படுத்தியதால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ் அப்பில் ஆடியோ மெசேஜ் மூலம் தனது உறவினருக்கு தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து செல்போன் லோகேசன் மூலம் அவரது கார் மொண்டிபாளையம் அருகே செட்டிப்புதூரில் நிற்பதை குடும்பத்தினர் கண்டறிந்தனர். காரின் உள்ளே ரிதன்யா விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார். இதனால் உறவினர்கள் மறியலையடுத்து ரிதன்யாவின் தற்கொலைக்கு காரணமான கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.