தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாஜி அமைச்சர் உதயகுமாருக்கு நெருக்கமான இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் திடீர் விலகல்: மதுரை அதிமுகவில் பரபரப்பு

Advertisement

திருமங்கலம்: மதுரை மேற்கு மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராக இருந்த ஆர்யா நேற்று அக்கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், திருமங்கலத்தினை சேர்ந்தவர் ஆர்யா. அதிமுகவில் கடந்த 2007 முதல் இருந்து வருகிறார். தற்போது மதுரை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராக பணிபுரிந்து வந்தார். மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் உதயகுமாருடன் நெருக்கமானவர் என்பதால், கடந்த 2020 மதுரை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு கட்சி பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் தனிப்பட்டகாரணங்கள் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக அனைத்து பொறுப்புகளிலிருந்து, அதிமுகவிலிருந்து விலகிக் கொள்வதாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் நேற்று அனுப்பிவைத்துள்ளார். இதே போல் முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான உதயகுமாருக்கு தனது விலகல் கொடுத்து தகவல் தெரிவித்து விட்டதாக ஆரியா தெரிவித்தார். இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் கட்சியிலிருந்து விலகியது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement