தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து காலமானார்: மதுரையில் இன்று இறுதிச் சடங்கு

Advertisement

மதுரை: நெல்லையை சேர்ந்தவர் நெல்லை சு.முத்து (74). கேரள மாநிலம் திருவனந்தபுரம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றினார். மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாமுடன் பணியாற்றியுள்ளார். அறிவியல், விண்வெளி தொடர்பாக இவர் ஏராளமான நூல்கள் மற்றும் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது 4 புத்தகங்களுக்கு தமிழ்நாடு அரசு சிறந்த நூலுக்கான விருதை வழங்கியுள்ளது.

பணி ஓய்விற்கு பின் சு.முத்து திருவனந்தபுரம் மண்விளையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் பிற்பகலுக்கு பின்னர் இவரது வீடு திறக்கப்படவில்லை. பக்கத்துவீட்டினர் கதவைத் தட்டியும் திறக்கவில்லை. மதுரையில் உள்ள அவரது மகளான டாக்டர் கலைவாணிக்கு தெரிவித்தனர். அவர் ெசல்போனுக்கு தொடர்பு ெகாண்டும் எடுக்காததால் கதவை உடைத்து பார்க்குமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து கதவை உடைத்து பார்த்தபோது முத்து, குளியலறை அருகே கீழே விழுந்து இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து ஸ்ரீகாரியம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தில் சு.முத்துவின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழ்ச்சங்க புரவலர் பி.ஆர்.எஸ்.முருகன், தலைவர் முத்துராமன் உள்பட ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன்பின் உடல் மதுரை கலைநகரில் உள்ள மகள் டாக்டர் கலைவாணியின் வீட்டுக்கு நேற்று இரவு வந்தது. இன்று இறுதிச் சடங்கு நடக்கிறது.

மறைந்த நெல்லை சு.முத்துவுக்கு மரகதம் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். முதல்வர் இரங்கல் செய்தி: முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இஸ்ரோ முன்னாள் அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர் நெல்லை சு.முத்து மறைந்த செய்தியறிந்து வேதனையுற்றேன். இந்தியாவுக்கு பெருமை சேர்த்து, தமிழ்மொழிக்கு வளம் சேர்த்து வாழ்ந்து மறைந்துள்ள நெல்லை சு.முத்துவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

 

Advertisement

Related News