தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் நிறுவனம் நடத்தி போலி விசா கொடுத்து மோசடி அதிமுக நிர்வாகி அதிரடி கைது: டெல்லி போலீசார் நடவடிக்கை

பரமத்திவேலூர்: வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் நிறுவனத்தை நடத்தி, இளைஞர்களுக்கு போலி விசா கொடுத்து மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகியை டெல்லி போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (57). நாமக்கல் மாவட்ட அதிமுக இலக்கிய அணி துணை செயலாளர்.

Advertisement

பரமத்திவேலூரில் வெளிநாட்டு வேலைக்கு, ஆட்களை அனுப்பும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், வெளிநாட்டு வேலைக்கு செல்ல, பரமத்திவேலூர் மற்றும் காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த 2 இளைஞர்களுக்கு நேர்முக தேர்வு மற்றும் பயிற்சி அளித்துள்ளார். பின்னர், பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கான விசாவை, அந்த இளைஞர்களுக்கு கொடுத்து உள்ளார். அந்த இளைஞர்கள், கடந்த மாதம் மும்பையில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல ஏர்போர்ட்டிற்கு சென்றனர். அப்போது, போலீசார் அவர்களது விசாவை ஆய்வு செய்த போது, போலி விசா என்பது தெரியவந்தது.

தொடர் விசாரணையில், அவர்களுக்கு விசா பெற்று கொடுத்தது, பரமத்திவேலூரில் உள்ள வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனம் நடத்தி வரும் கண்ணன் என்பதும், அவர் அந்த இளைஞர்களுக்கு சென்னையை சேர்ந்த ஒரு நபரிடம் இருந்து, போலி விசா வாங்கி கொடுத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, டெல்லி போலீசார் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகம் வந்தனர். பின்னர், பரமத்தி வேலூருக்கு வந்த அவர்கள் உள்ளூர் போலீசார் உதவியுடன் கண்ணனை கைது செய்தனர். பின்னர், அவரை பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தொடர்ந்து, விசா மோசடி வழக்கில் கண்ணனிடம் விசாரணை நடத்த வேண்டும் என, டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அதன்படி, நீதிமன்ற அனுமதியுடன், கண்ணனை நேற்று டெல்லிக்கு அழைத்துச்சென்றனர். வெளிநாடு செல்ல விரும்பிய இளைஞர்களுக்கு, போலி விசா கொடுத்த அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement