தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெளிநாடுகள், ஐஎம்எப் நிதியுதவியை எதிர்பார்க்கும் நிலை இனி ஏற்படாது: பாகிஸ்தான் பிரதமர் கூறுகிறார்

Advertisement

இஸ்லாமாபாத்: வெளிநாடுகள், சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியை பாகிஸ்தான் எதிர்பார்த்து நிற்கும் நிலை ஏற்படாது என் அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நம்பிக்கை தெரிவித்தார். பாகிஸ்தானில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.பொருளாதாரத்தை சீரமைக்க சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளித்துள்ளது.

ரூ.66,400 கோடி கடன் வாங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம்(ஐஎம்எப்) பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில்‘‘, ஐஎம்எப்பிடம் நிதி உதவி கோரிய பல நாடுகள் உள்ளன. ஒரு முறை நிதி உதவி கோரிய நாடுகள் மீண்டும் ஐஎம்எப்பிடம் நிதி உதவி கோருவதற்கான தேவை ஏற்படவில்லை. இனி மேல் ஐஎம்எப்பிடம் கோரப்படும் நிதியுதவி தான் பாகிஸ்தான் வரலாற்றில் கடைசியாக இருக்கும்.

இனி அரசிற்கு கிடைக்கும் வருவாயில் ஒவ்வொரு பைசாவும் நாட்டின் வளர்ச்சிக்கு செலவிடப்படும். செலவுகள் குறைக்கப்பட்டு, இன்னும் 5 ஆண்டுகளுக்குள் இளைஞர்களுக்கு கல்வி மற்றும் திறன் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.அரசின் செலவினங்களை குறைக்க துணிச்சலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.இதன் மூலம் பொருளாதாரம் மீண்டும் வலுப்பெறும்.வெளிநாட்டு சுற்றுபயணத்தின் போது அங்கு உள்ள தலைவர்களை சந்தித்தபோது, கடன்பெறுவதற்கு நான் வரவில்லை. வர்த்தக உறவுகளுக்காக வந்துள்ளேன் என்று சொன்னேன்.பாகிஸ்தானின் கடன் சங்கிலி உடைக்கப்படும்.நாட்டின் நலனுக்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றார்.

Advertisement