தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெளிநாடுகளுக்கு விதிமீறி ஆட்களை அனுப்பிய 40 ஏஜென்டுகளின் உரிமம் ரத்து: பஞ்சாப் போலீஸ் அதிரடி

Advertisement

அமிர்தசரஸ்: அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் மக்களை நாடு கடத்தும் பணியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடுக்கிவிட்டுள்ளார். அந்த வகையில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை அவரவர் நாடுகளுக்கு அமெரிக்க ராணுவ விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கிறார். இந்தியாவை சேர்ந்த 330க்கும் மேற்பட்ட மக்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். பயண முகவர்கள் மூலம் பல லட்சம் ரூபாயை செலுத்தி சட்டவிரோதமாக இவர்கள் அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர்.

அதனால் தற்போது நாடு கடத்தப்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் போலி பயண முகவர்கள் மீது பஞ்சாப் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து அமிர்தசரஸ் துணை ஆணையர் சாக்ஷி சாஹ்ன் கூறுகையில், ‘வெளிநாடுகளுக்கு உரிய ஆவணங்களின்றி சட்ட விரோதமாக ஆட்களை அனுப்பி வைத்த பயண முகவர்கள் 40 பேரின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர்களின் மையங்களும் மூடப்பட்டன. சட்டவிரோதமாக மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பயண முகவர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Advertisement

Related News