தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெளிநாட்டு நிதி உதவி மூலம் மத மாற்றம் செய்தால் என்ஜிஓ உரிமம் ரத்து: உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

Advertisement

புதுடெல்லி: மதமாற்றம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டால் என்ஜிஓ அமைப்புகளின் பதிவு ரத்து செய்யப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகள், மத மாற்றம், தீங்கிழைக்கும் நோக்கத்துடன் போராட்டங்களைத் தூண்டுதல், பயங்கரவாதம் அல்லது தீவிர அமைப்புகளுடன் தொடர்பு உள்ள எந்தவொரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உாிமத்தையும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் 2010ன் கீழ் உள்துறை அமைச்சகம் ரத்து செய்ய முடியும்.

அதே போல் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அதன் திட்டங்கள் அடிப்படையில் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தவில்லை என்றாலோ அல்லது வருடாந்திர வருமானத்தைப் பதிவேற்றவில்லை என்றாலோ பதிவு ரத்து செய்யப்படும். எனவே வெளிநாட்டு பங்களிப்புகளைப் பெறும் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் அல்லது வெளிநாட்டு நிதியை ஏற்க அனுமதிக்கப்படாது.

அதே போல் என்ஜிஓக்களில் உள்ள ஏதேனும் அலுவலகப் பொறுப்பாளர், உறுப்பினர், முக்கியப் பணியாளர்கள் உள்துறை அமைச்சகம் கேட்கும் விளக்கங்களுக்குப் பதிலளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்ட போதிலும், தேவையான தகவல் அல்லது ஆவணங்களை வழங்காமல் இருந்தாலும் பதிவு ரத்து செய்யப்படலாம். ேமலும் கடைசி 6 நிதியாண்டுகளின் வருடாந்திர வருமானத்தை பதிவேற்றம் செய்யவில்லை, குறைந்தபட்ச தொகையான ரூ.15 லட்சத்தை செலவழிக்கும் அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை. கடைசி 3 நிதியாண்டுகளில் சமூக நலனுக்கான செயல்பாடுகளும் இல்லை என்றாலும் பதிவை ரத்து செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News