கொனாக்ரி: மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் நெசரகோரே நகரில் உள்ள ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் உள்ளூர் கால்பந்து அணிகள் இடையே நடந்த போட்டியின்போது இரு தரப்பினரும் மோதிக் கொண்டதால் கலவரம் வெடித்தது. இந்த சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 56 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கலவரத்துக்கு காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கினியா நாட்டு பிரதமர் அமடோ ஊரி பா உத்தரவிட்டுள்ளார்.
Advertisement


