Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உணவே மருந்து

* சுடுநீரில் வெற்றிலையை கொதிக்க வைத்து, அதை தினமும் பருகி வர உடலில் நோய் தொற்றுகள் அண்டாது.

* ஏப்பம் அடிக்கடி வந்தால் அரை ஸ்பூன் ஓமத்தை வாயில் போட்டு மென்று தின்று விழுங்கினால் ஏப்பம் வராது.

* ஒரு கப் தண்ணீரில் கடுகு போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால், ஃபிரிட்ஜில் உள்ள கெட்ட வாடை போய்விடும்.

* வெந்நீருடன் வெங்காயச் சாற்றை கலந்து வாய்கொப்பளித்தால் பல்வலி தீரும்.

* வெந்தயத்தை தயிரில் ஊறவைத்து காலை நேரத்தில் குடித்தால் உஷ்ணம் குறையும். மலச்சிக்கல் தீரும்.

*தண்ணீர் தாகம் அடங்காமல் அதிகமாக இருந்தால் அரச இலையை ஊறவைத்து, அந்த தண்ணீரை பருகினால் தீராத தாகமும் தீரும்.

*வெங்காயத்தில் உள்ள கூட்டுப் பொருள் ரத்தத்தில் கொழுப்பை தானாகவே கரைக்கும்.

*காலை உணவுக்கு அரைமணி நேரம் முன்பே தோல் நீக்கிய இஞ்சித் துண்டை சாப்பிட்டால் தொப்பை தானாகவே கரையும்.

*பாதாம் பாலுடன் சிறிது கசகசாவை சேர்த்து அரைத்து, அவற்றுடன் சிறிது பசும்பால் சேர்த்து குடித்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

*ஜலதோஷத்தால் அவதிப்படுபவர்கள் பச்சை வெங்காயத்தை சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்தால் ஜலதோஷம் சரியாகிவிடும்.

*இஞ்சிச் சாறுடன் சிறிது சீரகம், சிறிது மிளகு தூள் சேர்த்து சாப்பிட்டால் புளித்த ஏப்பம் தீரும். நன்கு செரிக்கும்.

*மருதாணியை கையில் வைக்கும் முன் எலுமிச்சை சாறை விரலில் தடவிக்கொண்டால் மருதாணி சிவப்பாக, நன்றாக இருக்கும்.

- விமலா சடையப்பன்.