* சுடுநீரில் வெற்றிலையை கொதிக்க வைத்து, அதை தினமும் பருகி வர உடலில் நோய் தொற்றுகள் அண்டாது.
* ஏப்பம் அடிக்கடி வந்தால் அரை ஸ்பூன் ஓமத்தை வாயில் போட்டு மென்று தின்று விழுங்கினால் ஏப்பம் வராது.
* ஒரு கப் தண்ணீரில் கடுகு போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால், ஃபிரிட்ஜில் உள்ள கெட்ட வாடை போய்விடும்.
* வெந்நீருடன் வெங்காயச் சாற்றை கலந்து வாய்கொப்பளித்தால் பல்வலி தீரும்.
* வெந்தயத்தை தயிரில் ஊறவைத்து காலை நேரத்தில் குடித்தால் உஷ்ணம் குறையும். மலச்சிக்கல் தீரும்.
*தண்ணீர் தாகம் அடங்காமல் அதிகமாக இருந்தால் அரச இலையை ஊறவைத்து, அந்த தண்ணீரை பருகினால் தீராத தாகமும் தீரும்.
*வெங்காயத்தில் உள்ள கூட்டுப் பொருள் ரத்தத்தில் கொழுப்பை தானாகவே கரைக்கும்.
*காலை உணவுக்கு அரைமணி நேரம் முன்பே தோல் நீக்கிய இஞ்சித் துண்டை சாப்பிட்டால் தொப்பை தானாகவே கரையும்.
*பாதாம் பாலுடன் சிறிது கசகசாவை சேர்த்து அரைத்து, அவற்றுடன் சிறிது பசும்பால் சேர்த்து குடித்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
*ஜலதோஷத்தால் அவதிப்படுபவர்கள் பச்சை வெங்காயத்தை சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்தால் ஜலதோஷம் சரியாகிவிடும்.
*இஞ்சிச் சாறுடன் சிறிது சீரகம், சிறிது மிளகு தூள் சேர்த்து சாப்பிட்டால் புளித்த ஏப்பம் தீரும். நன்கு செரிக்கும்.
*மருதாணியை கையில் வைக்கும் முன் எலுமிச்சை சாறை விரலில் தடவிக்கொண்டால் மருதாணி சிவப்பாக, நன்றாக இருக்கும்.
- விமலா சடையப்பன்.
