தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

3வது மாடியில் இருந்து குதித்து காதல் ஜோடி தற்கொலை

Advertisement

திருமலை: திருமணம் செய்து கொள்ளாமல் 3வது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்த காதல் ஜோடியிடையே ஏற்பட்ட தகராறில் திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டனர். ஆந்திர மாநிலம், அமலாபுரத்தை சேர்ந்தவர் பில்லிதுர்காராவ் (28). கேட்டரிங் தொழிலாளி. இவரும் ஐதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த சுஷ்மிதா (23) என்பவரும் காதலித்துள்ளனர். திருமணம் செய்யாமலேயே இவர்கள் சில வருடங்களாக விசாகப்பட்டினத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாடகை எடுத்து வசித்துள்ளனர். இவர்களுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு திடீரென தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த அவர்கள் வீட்டில் இருந்த டி.வி ரிமோட், தேநீர் கோப்பைகள், கண்ணாடிப் பொருட்களை உடைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடியில் இருந்து குதித்து இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து குடியிருப்பு காவலாளி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement

Related News