தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதல் குற்றத்தில் ஈடுபடும் சிறாரை சீர்திருத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து

Advertisement

மதுரை: முதல் குற்றத்தில் ஈடுபடும் சிறார்களை சீர்திருத்த முயற்சிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மதுரையைச் சேர்ந்த 19 வயதான ஒருவர், செல்போன் திருட்டு வழக்கில் ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘மனுதாரருக்கு 19 வயதாகிறது. கைதான அதே நாளில் மேலும் 4 வழக்குகள் பொய்யாக பதிந்துள்ளனர்’’ என வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில், ‘‘மனுதாரர் தொடர்ச்சியாக இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார். அவர் மீது ஏற்கனவே 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமுதாயத்திற்கு தொடர்ந்து தொந்தரவாக செயல்படுகிறார். எனவே, ஜாமீன் வழங்கக் கூடாது’’ என வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ‘‘ஒரு இளைஞன் ஒரு குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டாலும், காவல் துறையினர் வெவ்வேறு வழக்குகளில் சிக்க வைக்கப் போகிறார்கள் என்பது புரிந்தவுடன் தொடர்ச்சியாக குற்றங்களில் ஈடுபட முடிவு செய்கிறான். ஒரு கூட்டத்தின் தலைவனாகிறான். குற்றவாளிகளாக மாறிய பல சிறார்களின் கதை இது. சிறார்களை சீர்திருத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், அது தமிழ்நாடு முழுவதும் பரவவில்லை. எனவே, முதல் குற்றத்தில் ஈடுபடும் சிறார்களை சீர்திருத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவை தமிழக சிறை துறையின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் மதுரை சரக சிறை துறையின் துணை தலைவர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டும். மனுதாரர் செப். 29 முதல் சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர் மதுரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தினசரி காலை 10.30 மணிக்கு ஆஜராக கையெழுத்திட வேண்டும்’’ என நிபந்தனை விதித்துள்ளார்.

Advertisement

Related News