தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவுடன் காவல்துறை இணையதளத்தில் உடனே பதிவேற்ற வேண்டும்: போலீஸ் கமிஷனருக்கு அமர்வு நீதிமன்றம் கடிதம்

Advertisement

சென்னை: முதல் தகவல் அறிக்கையை உடனடியாக காவல்துறை இணையதளத்தில் பதிவேற்ற நடவடிக்கைகள் எடுக்க காவல் நிலைய அதிகாரிகளுக்கு உரிய உத்தரவிட வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கடிதம் எழுதியுள்ளார். பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படுகின்ற முதல் தகவல் அறிக்கைகள் உடனடியாக காவல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. இதனால் குற்றம் சட்டப்பட்டவர்கள், அவர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் ஆஜராகி முறையிட்டார்.

அவர் கூறும்போது, உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் காவல்துறை பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கையை உடனடியாக காவல்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது உடனடியாக முதல் தகவல் அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில்லை. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரினார். இதைக்கேட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன், சென்னை காவல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல் தகவல் அறிக்கைகள் குறித்த காலத்திற்குள் காவல் நிலையங்களில் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. இது தொடர்பாக வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் தொடர்ந்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் காவல் நிலைய அதிகாரிகளுக்கு முதல் தகவல் அறிக்கையை விரைந்து காவல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News