தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆழ்வார்குறிச்சி அருகே முள்ளிமலை பொத்தையில் தீ விபத்து: அரியவகை செடிகள் நாசம்

Advertisement

கடையம்: தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மீனாட்சிபுரம் முள்ளிமலை பொத்தை உள்ளது. இங்கு கரடி, மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட வட விலங்குகள் வசித்து வருகின்றன. நேற்றுமுன்தினம் இரவு முள்ளிமலை பொத்தையின் மேற்கு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் தீ மளமள என பரவியது. தொடர்ந்து நேற்று மாலை வரை மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதி வரை பாதி மலை தீயில் எரிந்தது. பின்னர் பெய்த சாரல் மழையால் தீயணைந்தது. இந்த தீயில் பொத்தையில் உள்ள அரிய வகை மரம், செடி மற்றும் மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின.

இந்த தீ விபத்தால் வனவிலங்குகள் ஊருக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டது. தீவிபத்தின் போது மலையில் இருந்து எழும்பிய புகையால் சுற்றுவட்டாரத்தில் இரண்டு கிலோமீட்டர் பகுதியில் சாம்பல் பரவியது. இதுகுறித்து வனத்துறையிடம் கேட்டபோது ‘தற்போது புலிகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதால் அந்த பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வன ஊழியர்கள் இல்லாமல் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’ என்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பொத்தை அடிவாரத்தில் உள்ள கல்யாணிபுரம் பகுதியை சேர்ந்த ஒரு மூதாட்டியை கரடி தாக்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News