ஜி.எஸ்.டி. ஆணையரக அலுவலகத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது
Advertisement
சென்னை: சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. ஆணையரக அலுவலகத்தில் சுமார் 2.30 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 3 வண்டிகளில் வந்துள்ள தீயணைப்புப் படையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தளவாடப் பொருட்கள், முக்கிய ஆவணங்கள், மின்னணு உபகரணங்கள் ஆகியவை எரிந்து சேதம் எனத் தகவல். தீ விபத்துக்கான காரணம் குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement