நிதி நிறுவன மோசடி வழக்கு; தேவநாதன் யாதவ் மீது விரைவில் நடவடிக்கை: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தகவல்
Advertisement
இந்நிலையில், இந்த விவகாரத்தில் 300 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதால் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி முதலீட்டாளர்கள் நலச்சங்க தலைவர் சதீஷ்குமார் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவல்கள் மூலம் வழக்கு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,விரைவாக நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Advertisement