தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இறுதிக்கட்டத்தில் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இந்தியா மீதான வரிகள் குறைக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

நியூயார்க்: “இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்தியா மீதான வரிகள் குறைக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் 2ம் முறையாக பதவி ஏற்ற டொனால்ட் டிரம்ப், பல்வேறு நாடுகள் மீது கடும் வரிகளை விதித்து வருகிறார். குறிப்பாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத பரஸ்பர வரியையும், ரஷ்யாவிடம் இருந்து கச்ச எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக கூடுதலா 25 சதவீத வரியையும் டிரம்ப் விதித்துள்ளார்.

Advertisement

இந்த 50 சதவீத வரியால் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் இந்தியா அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.  இந்நிலையில் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் பற்றி அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர் ஓவல் அலுவலகத்தில் நேற்று பதவி ஏற்று கொண்டார்.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “பிரதமர் மோடியுடன் அமெரிக்கா ஒரு அற்புதமான உறவை கொண்டுள்ளது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா ஒரு முக்கியமான பொருளதார மற்றும் மூலோபாய பாதுகாப்பு கூட்டாளி. இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரை கொண்டுள்ளது. ரஷ்யாவுடன் எண்ணெய் கொள்முதல் செய்த இந்தியா மீது அதிக வரிகள் விதிக்கப்பட்டன.

தற்போது அவர்கள் ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதை நிறுத்தி விட்டனர். அது கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இது கடந்த காலத்தில் இருந்ததை விட வித்தியாசமான வர்த்தக ஒப்பந்தம். அதிக வரிகள் காரணமாக எங்களை நேசிக்காத இந்தியா இனி எங்களை நேசிக்கும். இதேபோல் ரஷ்ய எண்ணெய் கொள்முதலை குறைத்துள்ள இந்தியா மீதான வரி விதிப்புகள் குறைக்கப்படும்” என தெரிவித்தார்.

* செர்ஜியோ கோருக்கு டிரம்ப் வாழ்த்து

முன்னதாக இந்தியாவுக்கான தூதராக பதவியேற்ற செர்ஜியோ கோருக்கு கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்த டிரம்ப், “உலகின் மிகப்பழமையான நாகரிகங்களில் ஒன்றான இந்தியாவின் தூதராக பதவி ஏற்றுள்ள செர்ஜியோ கோர், அமெரிக்காவுக்கு ஒரு சிறந்த பிரதிநிதியாக இருப்பார் என நம்புகிறேன். அவர் நம் நாட்டையும், அவரது நண்பர்களையும் பெருமைப்படுத்துவார். அவரை நான் நீண்டகாலமாக அறிவேன். கோர் ஒரு சிறந்த மனிதர்” என புகழாரம் சூட்டினார்.

Advertisement