தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண் போலீஸ் குறித்து ஆபாச பேச்சை ஒளிப்பரப்பிய யூடியூப் சேனல் மீது வழக்கு: சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு

Advertisement

கோவை: பெண் போலீஸ் குறித்து ஆபாசமாக பேசிய யூடியூபர் சங்கரின் பேட்டி ஒளிபரப்பிய யூ டியூப் சேனல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். யூடியூபர் சங்கர் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளிக்கும் போது பெண் போலீஸ் குறித்து ஆபாசமாக பேசினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து பெண் எஸ்.ஐ ஒருவர் அளித்த புகாரின்பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேனியில் ஓபிஎஸ் உறவினருக்கு சொந்தமான விடுதியில் இருந்தார்.

அவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சங்கர் வரும் 17ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். சங்கர் கைது செய்யப்பட்ட பின் அவரது அறையில் சங்கர் கார் டிரைவரான சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த பிரபு (27), உதவியாளரான பரமக்குடியை சேர்ந்த ராஜரத்தினம் (42) ஆகியோர் இருந்தனர்.

அந்த அறையில் பழனிசெட்டிபட்டி போலீசார் சோதனையிட்டனர். அப்போது, அறையில் கஞ்சா நிரப்பிய சிகரெட்கள், உலோகத்தினாலான கூம்பு வடிவ சிகரெட் நிரப்பும் குழாய்கள், 400 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சங்கர், அவரது ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மீது கஞ்சா வழக்கு பதிய செய்யப்பட்டு, ஓட்டுநர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சங்கர் பேட்டியை ஒளிபரப்பியதாக யூ டியூப் சேனல் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து உள்ளதாக இன்ஸ்பெக்டர் அருண் தெரிவித்து உள்ளார்.

சங்கர் மீது பதிவான அதே வழக்குப்பிரிவில் இரண்டாவது குற்றவாளியாக யூ டியூப் சேனல் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த சூழலில், சங்கர் காவலில் எடுத்து விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

Advertisement

Related News