Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

போலி நகைகளை வைத்துவிட்டு ரூ.4.10 லட்சம் மதிப்பு நகையை திருடிய பெண் ஊழியர் கைது

சென்னை: தி.நகர் டாக்டர் நாயர் தெருவில் சுரேஷ் ஜெயின் என்பவர் தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த 22ம் தேதி ரேவதி (33) என்பவரை பணியில் சேர்த்துள்ளார். அதன் பிறகு திடீரென கடந்த 3ம் தேதி ரேவதி பணியில் இருந்து நின்றுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த கடையின் உரிமையாளர் ரேவதிக்கு ஒதுக்கப்பட்ட பிரிவில் உள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை ஆய்வு ெசய்த போது, அதில் ₹6 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் திருடுபோனது தெரியவந்தது. உடனே கடை உரிமையாளர் சுரேஷ் ஜெயின், பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்திய போது, ரேவதி திட்டமிட்டு திருடிய நகைகளுக்கு பதில் போலியான நகைகளை வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் சிசிடிவி காட்சிகளின் படி, எம்.கே.பி.நகர் சர்மா நகரை சேர்ந்த ரேவதியை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.