தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மண்வளம், நீர் வளத்தை மேம்படுத்த விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும்

Advertisement

*வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தல்

கீழ்பென்னாத்தூர் : மண்வளம், நீர் வளத்தை மேம்படுத்த விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

இந்த கோடை மழையைப் பயன்படுத்தி கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தில் நிலச்சரிவிற்கு குறுக்காக விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும். கோடை உழவு செய்வதன் காரணமாக பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன.

அறுவடைக்குப்பின் வேரின் அடிக்கட்டைகள் மக்குவதற்கு அதிக வாய்ப்பின்றி மேல் மண் கடினமாக இருக்கும். அதனால் பெய்யும் மழைநீர் பூமிக்குள் இறங்காமல் அப்படியே வடிந்து ஓடி வீணாகிவிடும். எனவே மழைக்குப்பின் நிலச்சரிவுக்கு குறுக்காக உழவு செய்ய வேண்டும்.

அவ்வாறு உழவு செய்வதால் மண் மிருதுவாகி மழை நீரை நன்கு உறிஞ்சி நிலத்திற்குள் இறங்கும்.

இதனால் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். மண் அரிப்பு காக்கப்படும் சத்துக்கள் வீணாகாமல் தடுக்கப்படும். முதற்பயிரின் தூர்கள் மக்குவதோடு, களைகளும் கட்டுப்படுத்தப்படும்.

மண்ணில் உள்ள கூண்டுப் புழுக்கள் வெளியில் கொண்டுவரப்பட்டு, பறவைகள் மூலம் கொத்தி அழிக்கப்படும். மேலும் நோய்களை ஏற்படுத்தும் பூஞ்சான்கள் மற்றும் பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் அவற்றின் வித்துக்கள் அழிக்கப்பட்டு, அடுத்த பயிரில் நோய்த் தாக்குதல் குறையும். மண்ணில் காற்றோட்டம் அதிகரிப்பதால் மண்ணின் அமைப்பும் வளமும் மேம்படுகிறது.

எனவே தற்போது பெய்யும் கோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் நிலத்தை உழவு செய்து மண்வளம் மற்றும் நீர் வளத்தை மேம்படுத்த வேண்டும் என்று கீழ்பென்னாத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் அன்பழகன் அறிவுறுத்தினர்.

Advertisement

Related News