விவசாயி மீது பொய் புகார் பதிவு செய்து துன்புறுத்திய எஸ்.ஐ. சுதன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு
04:38 PM Feb 19, 2025 IST
Share
Advertisement
சென்னை: 2018ம் ஆண்டு நெல்லை மாவட்டம் சிவாலாப்பேரி காவல் நிலையத்தில் தன் மீது பொய் வழக்கு போட்டு அடித்து துன்புறுத்தியதாக விவசாயி காஸ்பர் வில்லியம் என்பவர் அளித்த புகாரில், எஸ்.ஐ சுதன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விவசாயி காஸ்பர் வில்லியமுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கவும், அந்த தொகையை சுதனிடம் இருந்து வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.