குடும்ப கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக மக்களவையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைய கூடாது: காங்கிரஸ் வலியுறுத்தல்
Advertisement
அதனால்தான் 2001ல் வாஜ்பாய் அரசு 2026ம் ஆண்டுக்குப் பிறகு எடுக்கப்பட்ட முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மக்களவையில் மறுசீரமைப்புகளைச் செய்ய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 82ஐ திருத்தியது. ஆனால், 2021ல் திட்டமிடப்பட்டபடி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால், தற்போது 2026 என்பது 2031ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை குறிக்கும். நீண்ட காலமாகத் தாமதமாகி வந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு விரைவில் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகின்றன. மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை தீர்மானிக்க அந்த கணக்கெடுப்பு பயன்படுத்தப்படுமா? அப்படிப்பட்ட சமயத்தில், தென் இந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கக் கூடாது என்பதில் சந்தேகம் இல்லை’’ என்றார்.
Advertisement