தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடும்ப தகராறு காரணமாக கணவர் தூக்கிட்டு தற்கொலை

Advertisement

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் குடும்ப தகராறு காரணமாக மதுபோதையில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  செங்கல்பட்டு பெரியநத்தம் கங்கையம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் விஜய் (28), ஜூவீதா தம்பதியினர். இவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டநிலையில் விஜய் செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியில் மாங்காய் வியாபாரம் செய்து வருகின்றார்.

இந்நிலையில், நான்கு ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் விஜய் மது அருந்துவிட்டு வீட்டிற்க்கு வருவதால் குடும்பத்தில் அடிக்கடி சிறு சிறு பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும், குழந்தை பெற்றுகொள்ள ஜூவீதா தனது கணவர் விஜய்யை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூறியுள்ளார். ஆனால், விஜய் அழைத்து செல்லாமல் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனை தொடர்ந்து, மது அருந்துவிட்டு மதுபோதையில் நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார் விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News