தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியா குறித்து பொய் செய்தி 16 பாக். யூடியூப் சேனல் முடக்கம்: பிபிசிக்கு எச்சரிக்கை

Advertisement

புதுடெல்லி: காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், இந்தியா குறித்தும், இந்திய ராணுவத்தை பற்றியும் தவறான, வெறுப்பூட்டும் மற்றும் மத ரீதியாக உணர்வுப்பூர்வ செய்திகளை பரப்பியதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது. இதில் பாகிஸ்தானின் முக்கிய ஊடகமான டான் நியூஸ், சமா டிவி, ஜியோ நியூஸ் போன்றவையும் அடங்கும். ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இங்கிலாந்தை சேர்ந்த பிபிசி செய்தி நிறுவனம், பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்களை தீவிரவாதிகள் எனக் கூறாமல், போராளிகள் என செய்தியில் குறிப்பிட்டதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் பிபிசி இந்தியா தலைவர் ஜாக்கி மார்ட்டினுக்கு அனுப்பிய கடிதத்தில், பிபிசியின் செய்திகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீர் தாக்குதலுக்குப் பிறகு இந்தியர்களுக்கான விசாவை பாகிஸ்தான் நிறுத்தியது என்ற பிபிசியின் செய்திக்கும் ஒன்றிய அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. மேலும், இந்திய ராணுவத்தை நவீனமாக்க தினமும் ஒரு ரூபாய் வழங்குவது குறித்து வாட்ஸ் அப்பில் பரவி வரும் பணமோசடி தகவலையும் ஒன்றிய அரசு தடை செய்துள்ளது.

 

Advertisement

Related News