தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

39 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம் பாமகவுக்கும், ராமதாசுக்கும் சிலர் சடுகுடு காட்டி வருகிறார்கள்: அன்புமணி மீது ஸ்ரீகாந்தி கடும் தாக்கு

கடலூர்: பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் காரணமாக அன்புமணியை கட்சியை விட்டு நீக்கிய ராமதாஸ் புதிய செயல் தலைவராக தனது மூத்த மகள் ஸ்ரீகாந்தியையும், இளைஞர் சங்க தலைவராக ஜிகே மணியின் மகன் தமிழ்குமரனையும் நியமித்தார். இதையடுத்து புதிய செயல் தலைவரான ஸ்ரீகாந்தியின் மேற்பார்வையில் தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று ஒரே நாளில் 39 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடைபெற்றன.

Advertisement

அதன்படி, கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பாமக சார்பில் கடலூர் அருகே கண்ணாரப்பேட்டையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி கலந்து கொண்டு பேசியதாவது: நான் ராமதாசின் நம்பிக்கைக்குரிய நபராக தொடர்ந்து பயணிப்பேன். இப்போது பாமகவுக்கும், ராமதாசுக்கும் சிலர் சடுகுடு காட்டி வருகிறார்கள். அதற்கு நாம் கவலைப்பட தேவையில்லை. நாம் நமது கொள்கைகளை பின்பற்றி பணிகளை செய்வோம்.

அனைத்தையும் ராமதாஸ் பார்த்துக் கொள்வார். எந்த கூட்டணி என்பதை தெளிவாக அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் ஸ்ரீகாந்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘கட்சியை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டேன். தற்போது மீண்டும் செயல் தலைவராக அந்த பணியை தொடர்வேன். கட்சியில் உள்ள பிரச்னைகளை பாமக நிறுவனர் விரைவில் சரிசெய்வார். டீசன்ட் அண்ட் டெவலப்மெண்ட் பாலிடிக்ஸ் பற்றி பேசுபவர்கள், அதனைத் தெரிந்து கொள்ள வேண்டும். அது யாரை குறிப்பிட்டேன் என அவர்களுக்கே தெரியும்’ என்றார்.

Advertisement

Related News