தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முன்னாள் இந்திய கடலோர காவல் படை , முன்னாள் இந்திய கடற்படை வீரார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு: தமிழ்நாடு காவல்துறை

சென்னை: முன்னாள் இந்திய கடலோர காவல் படை , முன்னாள் இந்திய கடற்படை வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு காவல்துறையில் கடலோர பாதுகாப்புக்; குழுமத்திலுள்ள அதிவிரைவுப்படகுகளை இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக வருடாந்திர ஒப்பந்த அடிப்படையில் (தேவைப்பட்டால், நீட்டிக்கப்படலாம்) பணிபுரிய 01.12.2025 நாளன்று 50 வயதுக்குக் கீழுள்ள தகுதி வாய்ந்த முன்னாள் இந்திய கடலோர காவல் படை மற்றும் முன்னாள் இந்திய கடற்படை வீரார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

பதவி : காவல் உதவி ஆய்வாளர் (படகு தொழில்நுட்ப ஆளிநர்

ஊதியம்: ரூ.36,900 மற்றும் இதர படிகள்

பணியிடங்கள்: 10

பதவி: தலைமை காவலர் ( படகு தொழில்நுட்ப ஆளிநர்)

ஊதியம்: ரூ.20600 மற்றும் இதர படிகள்

பணியிடங்கள்: 41

தகுதியான விண்ணப்பதாரரர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பரிந்துரைக்கப்பட்ட படிவத்தின்படி உரிய ஆவணங்களுடன் கூடுதல் காவல் துறை இயக்குநர். கடலோர பாதுகாப்பு குழுமம். காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகம். டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-4

என்ற முகவரிக்கு 17.12.2025-க்குள் தபால் மூலம் அனுப்பலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்து தேர்வு, வாய்மொழி தேர்வு போன்றவற்றுக்கு தனிப்பட்ட அழைப்பு கடிதங்கள் மூலம் அழைக்கப்படுவார்கள். ஆட்சேர்ப்பு, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. தகுதி, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், மாதிரி விண்ணப்ப படிவம் பின்வரும் இணையதள இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். என தெரிவிக்கப்பட்டது

Advertisement

Related News