ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்களில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 209 பேரும், மாற்றுத்திறன் வாக்காளர்கள் 47 பேரும் வீட்டிலிருந்தவாறே தங்களது வாக்குகளை தபால் மூலமாக செலுத்த விருப்பம் தெரிவித்திருந்தனர். இவர்களுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. அலுவலர்கள் அவர்களின் வீட்டிற்கே சென்று தபால் வாக்குகளை பெற்றனர். முதல் நாளில் 116 பேர் வாக்களித்தனர்.
Advertisement

