தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.53 கோடியில் விரிவாக்க பணி: ஈரோடு-பவானி சாலையில் மரங்கள் வெட்டி அகற்றம்

ஈரோடு: ஈரோட்டில் இருந்து பவானி செல்லும் சாலையில் ரூ.53 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்களை வெட்டி அகற்றும் பணி இன்று துவங்கியது. ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு சாலைகள் அகலப்படுத்துதல், மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஈரோட்டில் இருந்து பவானி செல்லும் சாலை இரு மார்க்கத்திலும் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சாலையில் விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் 4 வழிச்சாலையாக விரிவுப்படுத்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

Advertisement

இதை ஏற்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பவானி சாலையில் விரிவுபடுத்த வேண்டிய பகுதிகளை ஆய்வு செய்தனர். அதன்படி பவானி சாலையில் பிளாட்டினம் மகாலில் இருந்து சுண்ணாம்பு ஓடை வரை குறுகலாக உள்ள சாலையை அகலப்படுத்தவும், கிறிஸ்துஜோதி பள்ளி முதல் சத்தி சாலை சந்திப்பு வரை விரிவு படுத்தவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதை ஏற்று பவானி சாலையை 5.3 கி.மீ தூரத்திற்கு இரு பகுதிகளாக விரிவுப்படுத்த அரசு ரூ.53 கோடி நிதி ஒதுக்கியது. இப்பணியை கடந்த மாதம் 6ம் தேதி அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து சாலை விரிவாக்கம் செய்ய வேண்டிய பகுதிகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் போன்றவற்றை அகற்ற நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு-பவானி சாலையில் விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் அகற்றும் பணி இன்று துவங்கியது. போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் ஒவ்வொரு பகுதியாக மரங்கள் அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Related News