தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

11 ஆண்டுகளில் அமலாக்கத்துறையால் போடப்பட்ட 6,312 வழக்குகளில் 120 வழக்கில் மட்டுமே தண்டனை: நாடாளுமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்

டெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 11 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான அறிக்கையில், ‘கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் அமலாக்கத்துறையினரால் மொத்தம் 6 ஆயிரத்து 312 சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வெறும் 120 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2005 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 1,185 வழக்குகள் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் முடித்து வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

மேலும், 2019ம் ஆண்டிற்குப் பிறகு மூலக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்ததால் 93 வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் அதிகபட்சமாக 38 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விசாரணை முழுமையாக முடிக்கப்பட்ட வழக்குகளைக் கணக்கிட்டால், 2020 முதல் 2025 வரை அமலாக்கத்துறையின் தண்டனை விகிதம் 92 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை 34 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்டு வழங்கப்பட்டுள்ளன. நடைமுறை சிக்கல்கள் மற்றும் மூலக் குற்றங்களின் விசாரணையில் ஏற்படும் தாமதம் ஆகியவை வழக்குகளை விரைவாக முடிப்பதில் பெரும் சவாலாக உள்ளது’ என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Related News