தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் கே.கே.நகர், கோயம்பேடு, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!!

Advertisement

சென்னை: சென்னையில் கே.கே.நகர், கோயம்பேடு, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், தி.நகர், அசோக் நகர், சாலிகிராமம் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை கே.கே.நகரில் மருத்துவர் வரதராஜன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் நிறுவன மேலாண் இயக்குனர் குணசேகரன் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

சைதாப்பேட்டையில் தனியார் நிறுவன இயக்குனர் அலங்கநாதனின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். பலத்த பாதுகாப்பு உடன் சோதனை நடந்து வருகிறது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் பறிமுதல் செய்ய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விருகம்பாக்கம் காவேரி தெருவில் வசிக்கும் ஓய்வுபெற்ற மாசுக் கட்டுப்பாட்டு வாரிய கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தினர். அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பாண்டியன் வீட்டில் 2021 -ல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில் அமலாக்கத்துறை தற்போது சோதனை நடத்தியது. 2021-ல் சோதனையின் போது ரூ.1.37 கோடி, 3 கிலோ தங்கம், வெள்ளி, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News