Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்துபவர்கள் இந்தியாவை போன்ற எதிரிகள்: பாக். பாதுகாப்பு அமைச்சர் கருத்து

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதற்காக, கூட்டு அவாமி செயல் குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பினர் கடந்த 27ம் தேதி முதல் நடத்தி வரும் பேரணியில் இதுவரை 20 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் நேற்று அளித்த பேட்டியில், ‘‘போராட்டக்காரர்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் இருக்காது. நான் அவர்களை இந்தியாவுடன் ஒப்பிடுகிறேன். இந்தியாவைப் போல அவர்களும் பாகிஸ்தானின் எதிரிகளாகவே கருதுகிறேன்’’ என்றார்.