தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இமானுவேல் சேகரன் மணிமண்டபம் பணி அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

Advertisement

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சேர்ந்த குணசேகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தின் ஆர்ஜித நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து, பொதுமக்கள் பணத்தில் மணி மண்டபம் கட்டும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இதை எதிர்த்து விடுதலைக்களம் கட்சி தலைவர் ராஜ்குமார், மூவேந்தர் புலிப்படை தலைவர் பாஸ்கர், மாவீரன் சுந்தரலிங்கம் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், தேவேந்திரகுல வேளாளர் சட்ட பாதுகாப்பு மைய துணைச் செயலாளர் வீரபாண்டியன் மற்றும் மானகிரி வழக்கறிஞர் செல்வக்குமார் உள்ளிட்டோர் தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியா கிளெட் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தன.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘மணிமண்டபம் கட்டுமான பணிகள் 90 சதவீதம் நடந்துள்ளது. முடியும் நிலைக்கு வந்து விட்டன. அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளை எதிர்த்து தனிநபர் பொதுநல வழக்கு தொடர முடியாது. பொதுமக்களின் வசதிக்காக பரமக்குடியில் 3 இடங்களில் மார்க்கெட் உள்ளது. இங்கு எதுவும் இல்லை’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது. மணிமண்டபம் கட்டுவது தொடர்பான அரசின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை டிச. 19க்கு தள்ளி வைத்தனர்.

Advertisement

Related News