தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் மையம் அமைக்கும் பணி தீவிரம்: பசுமை எரிசக்தி கழகம் தகவல்: கடற்கரை-பூங்கா உள்ளிட்ட இடங்களில் நிறுவ திட்டம்

சென்னை: மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் சென்னையில் 9 இடங்களில் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் மின் வாகனங்களுக்கு தடையின்றி சார்ஜிங் வசதி கிடைக்க தேசிய நெடுஞ்சாலையில், 25 கி.மீ தூரத்துக்கு ஒன்றும், மாநகரங்களில் 3 கி.மீ தூரத்துக்கு ஒன்றும் என சார்ஜிங் மையங்களை அமைக்க பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்தவகையில், ரயில் பயணிகளின் வசதிக்காக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தை பொறுத்தவரை 500 சார்ஜிங் மையங்களை மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம் அமைக்க உள்ளது. இதில் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி மற்றும் பசுமை எரிசக்தி கழகம் இணைந்து அதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து அறிக்கை தயார் செய்து டெண்டரை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி, சென்னையில் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை, மெரினா கடற்கரை, செம்மொழி பூங்கா உள்பட ஒன்பது இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு, கடந்த ஆகஸ்டில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பங்கேற்ற நிறுவனங்களில் ரிலக்ஸ் எலக்ட்ரிக் நிறுவனம் தேர்வானது.

தற்போது அந்த நிறுவனம் மூலம் சார்ஜிங் மையம் அமைத்து பராமரிப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனம் மூலம் மையங்கள் அமைக்கப்பட்டு இதில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து கிடைக்கும் வருவாயை அந்நிறுவனம், மாநகராட்சி, பசுமை எரிசக்தி கழகம் ஆகியவை பகிர்ந்து கொள்ளும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement