தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதியவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மாமனார் வீட்டில் நிரந்தரமாக வசிக்க மருமகள் உரிமை கோர முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: முதியவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மாமனார் வீட்டில் மருமகள் தொடர்ந்து வசிப்பதற்கு உரிமை கோர முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் மாமனார், மாமியாருடன் வசித்து வந்தார். குடும்பப் பிரச்னை காரணமாக அவர் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அதே வீட்டில் வசிக்க உரிமை கோரியிருந்தார். ஆனால், அந்தப் பெண் அங்கு தங்கியிருப்பது வயதான மாமனார் மற்றும் மாமியாரின் உடல்நலத்திற்கும், அமைதிக்கும் கேடு விளைவிப்பதாகக் கூறி, அவரை இரண்டு மாதங்களுக்குள் வீட்டை காலி செய்யுமாறு தனி நீதிபதி முன்பு உத்தரவிட்டிருந்தார்.

Advertisement

மேலும், அந்தப் பெண் தங்குவதற்கு மாற்று ஏற்பாடு மற்றும் பராமரிப்புத் தொகை வழங்கவும் கணவர் தரப்பிற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அந்தப் பெண் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அனில் ஷேத்ார்பால் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது. தீர்ப்பின் போது நீதிபதிகள், ‘குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17ன் கீழ் ஒரு பெண்ணுக்கு வழங்கப்படும் குடியிருப்பு உரிமை என்பது பாதுகாப்புக்கானதுதானே தவிர, அது சொத்துரிமையோ அல்லது மாமனார் வீட்டில் காலவரையன்றி தங்குவதற்கான உரிமமோ அல்ல’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

மேலும் ‘மருமகளின் நடவடிக்கைகளால் முதியவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படும்போது, அவர்கள் தொடர்ந்து அந்தத் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று சட்டம் கூறவில்லை; மாற்று தங்குமிட வசதி செய்து தரப்படும் பட்சத்தில், முதியவர்களின் அமைதியான வாழ்க்கையே முக்கியம்’ என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். தனி நீதிபதியின் உத்தரவு நியாயமானது என்று கூறி நீதிமன்றம் வழக்கினை முடித்து வைத்தது.

Advertisement

Related News