தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.38 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

Advertisement

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.38 லட்சம் ஹவாலா பணத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.  ஆந்திராவில் இருந்து சென்னை எழும்பூருக்கு நேற்று விரைவு ரயில் ஒன்று வந்தது. அப்போது, எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில் நிலையத்தில் நின்ற ரயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த ரயிலில் உள்ள ஒரு பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பையை எடுத்து சோதனை நடத்தினர்.

இதில், ரூ.38 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணத்தை கொண்டு வந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நரேஷ் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த நபரை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த நபரிடம் பணத்துக்கான ஆதாரத்தை போலீசார் கேட்டதற்கு அந்த நபரிடம் முறையான ஆதாரங்கள் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், அந்த பணம் ஹவாலா பணம் என்பது தெரியவந்தது. இதை அடுத்து, அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த நபரை கைது செய்தனர். மேலும், அந்த நபர் கொண்டு வந்த ரூ.38 லட்சம் ஹவாலா பணத்தை வருமான வரித்துறை அதிகாரியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Advertisement