Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

கேரளாவில் தந்தை நிறுவனத்தில் சோதனை நடக்கும் நிலையில் சேலையூரில் தங்கிய கல்லூரி மாணவி அறையில் அமலாக்கத்துறை சோதனை

தாம்பரம்: கேரளாவில் தந்தை நிறுவனத்தில் சோதனை நடக்கும் நிலையில் சேலையூரில் தங்கியுள்ள கல்லூரி மாணவி அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தாம்பரம் அடுத்த சேலையூரில் கடந்த 2 ஆண்டுகளாக தங்கி இருப்பவர் ஆஸ்லின். இவர், கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கேரள மாநிலம் கோட்டயத்தை பூர்வீகமாக கொண்ட இவரது பெற்றோர் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தற்போது பெற்றோரின் தனியார் நிதி நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்திவரும் நிலையில், சேலையூரில் மாணவி தங்கியிருக்கும் அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் போலீசாருடன் 7 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் அண்ணாதுரைக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பின் 3ம் தளத்தில் மாணவ, மாணவிகள் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.