தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வரும் 2047ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் பெரிய வல்லரசாக இந்தியா மாறும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு

Advertisement

தேனி: வரும் 2047ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வல்லரசாக இந்தியா மாறும் என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண்மை அறிவியல் மையத்தில் மாவட்ட அளவிலான வள மைய திறப்பு விழா மற்றும் பெண் தொழில் முனைவோர்களுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கம் ேநற்று நடந்தது. இதில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:

3வது முறையாக பிரதமராக மோடி பொறுப் பேற்ற பின் 100 நாட்களில் ரூ.1,32,470 கோடி நிதி விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும் கிஷான் அட்டை வழங்கப்பட்டுள்ளது. விவசாயமும், விவசாயிகளுமே நாட்டின் முதுகெலும்பு என்ற என்ற அடிப்படையில், விவசாயிகளுக்கு கிரிஷி விக்யான் கேந்திரா திட்டம், நமோ டிரோன் திட்டத்தின் மூலம் விவசாயிகள் மருந்து தெளிப்பது, விதைகள் விதைப்பது, பயிர்களை பாதுகாப்பது போன்ற புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி வழிகாட்டி வருகிறார்.

அதேபோல், 1962 என்ற எண்ணுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தால் வீட்டிற்கே வந்து கால்நடைக்கு சிகிச்சை அளித்து செல்லும் முறை உலகத்தில் எங்கும் இல்லை. பால் கொள்முதலில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. உலக அளவில் இந்தியா பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. 2047ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வல்லரசாக இந்தியா மாறும். விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான ஆயுள் கால பாலிசிகளும் அதற்கான திட்டமும் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார்.

Advertisement

Related News