தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிழக்கு உகாண்டாவில் பயங்கர நிலச்சரிவு: 15 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கும் மேற்பட்டோர் காணவில்லை!!

Advertisement

கம்பாலா: கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 போ் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கு மேற்பட்டோர் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் கிழக்கு பகுதியில் தலைநகர் சுமார் 280 கிமீ தொலைவில் உள்ள புலாம்புலி பகுதியில் நேற்று முன்தினம் இரவில் கனமழை பெய்தது.

மலைப்பிரதேசமான இந்த பகுதியில் பெய்த கனமழையால் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் ஆறு கிராமங்களில் 40 வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த சம்பவப் பகுதியிலிருந்து இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டாலும், நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் மாயமாகியுள்ளதால் மொத்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனா். அதேபோல் காயமடைந்த 15 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட உடல்களில் குறைந்தது ஆறு பேர் குழந்தைகள் என்று உகாண்டா செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மழை தொடா்ந்து பெய்துவருவதால் மீட்புப் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மண் மூடியுள்ளதால் மீட்பு இயந்திரங்களைக் கொண்டுவர முடியாத நிலை உள்ளது. எனினும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு உகாண்டாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுவது இது முதல் முறையல்ல. 2010ம் ஆண்டு புத்தடாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் இதுவும் ஒன்றாகும்.

Advertisement

Related News